சுரண்டை:சுரண்டை பகுதியில் தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தென்காசி தொகுதி எம்எல்ஏ சரத்குமார் சுரண்டை பகுதியில் உள்ள பரங்குன்றாபுரம், மருதுபுரம், வாடியூர், மரியதாய்புரம், கரையாளனூர், குறிச்சான்பட்டி, குருந்தன்மொழி, மேலக்கலங்கல், கீழக்கலங்கல் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.பின்னர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு இவற்றுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் பேசும்போது: - ""இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளை அதிகாரிகளுடன் கலந்துபேசி அதற்கான தீர்வு காண்பேன். தென்காசி தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்'' என்றார்.நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சுரண்டை எஸ்.வி.கணேசன், பாவூர்சத்திரம் காளிதாசன், மாவட்ட சமக செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் பாண்டியாபுரம் கண்ணன், துரை, சேர்ந்தமரம் ராயப்பன், கீழப்பாவூர் ஒன்றிய சமக துணை செயலாளர் ஆர்.வி.ராமர், சிவன், ஆலங்குளம் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வாடியூர் அந்தோணிசாமி, தங்கம், பிரபாகரன், வின்சென்ட் நாடார், மாடசாமி, அருள், பரமசிவன், பூண்டிராஜ், திரிகூடபதி சேகர், சுரண்டை பாலன், அரவிந்த் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

