நான்குநேரி : நான்குநேரி எம்.எல்.ஏ.எர்ணாவூர் நாராயணன் நாளை (28ம் தேதி) முதல் ஜூன் 1ம் தேதி வரை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.நான்குநேரி தொகுதியில் போட்டியிட்ட சமக வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின் நாளை (28ம் தேதி) தொகுதிக்கு வருகிறார். இவர் நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்.நாளை பாளை.,ஒன்றிய பகுதியில் மாலை 4 மணி முதல் சுற்றுபயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். சீவலப்பேரியில் துவங்கி மடத்துப்பட்டி, மருதூர், தோணிதுறை, கீழபாட்டம், மணப்படைவீடு, கீழநத்தம், கேடிசிநகர் பகுதியில் நன்றி கூறுகிறார்.29 மற்றும் 30ம் தேதியும் பாளை.,யூனியன் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதி களக்காடு யூனியன் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். எம்.எல்.ஏ.வுடன் சமக, அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். இத்தகவலை சமக மாநில துணை செயலாளர் இளஞ்சேரன் தெரிவித்தார்.
Friday, 27 May 2011
சமக எம்.எல்.ஏ.எர்ணாவூர் நாராயணன் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
நான்குநேரி : நான்குநேரி எம்.எல்.ஏ.எர்ணாவூர் நாராயணன் நாளை (28ம் தேதி) முதல் ஜூன் 1ம் தேதி வரை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.நான்குநேரி தொகுதியில் போட்டியிட்ட சமக வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின் நாளை (28ம் தேதி) தொகுதிக்கு வருகிறார். இவர் நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்.நாளை பாளை.,ஒன்றிய பகுதியில் மாலை 4 மணி முதல் சுற்றுபயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். சீவலப்பேரியில் துவங்கி மடத்துப்பட்டி, மருதூர், தோணிதுறை, கீழபாட்டம், மணப்படைவீடு, கீழநத்தம், கேடிசிநகர் பகுதியில் நன்றி கூறுகிறார்.29 மற்றும் 30ம் தேதியும் பாளை.,யூனியன் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதி களக்காடு யூனியன் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். எம்.எல்.ஏ.வுடன் சமக, அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். இத்தகவலை சமக மாநில துணை செயலாளர் இளஞ்சேரன் தெரிவித்தார்.
