Friday, 8 June 2012

சமக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.நாராயணன் மக்கள் பணியில்

சமக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.நாராயணன் அவர்கள்போலியோ சொட்டு மருந்து வழங்கும் போது .


பாளையங்கோட்டை ஒன்றியம் உடையார்குளத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி,கிரைன்டர்,ஃபேன் வழங்கினார் சமக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.நாராயணன் அவர்கள்.




களக்காடு ஒன்றியம் தேவநல்லூர் பஞ்சாயத்தில் சமக நாங்குநேரி M.L.A. திரு.ஆ.நாராயணன் தலைமையில் கிரமசபை கூட்டம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

களக்காடு ஒன்றியம் திறுக்குறன்குடி பகுதியில் சூரைக்காற்றில் பாதிக்கபட்ட வாழை தோப்பு பகுதியை சமக நான்குநேரி ஏம்.எல்.ஏ. திரு.ஆ.நாராயணன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.



ரெட்டியார்பட்டியில் டெங்கு காய்சலுக்கு மருந்து அடிக்கும் பணியை துவங்கி வைக்கும் போது சமக நாங்குநேரி M.L.A திரு.நாராயணன் அவர்கள்.




Wednesday, 6 June 2012

தலைவரின் 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் முடிந்தது.

"AISMK"Leader Sarathkumar
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் எம்.எல்.ஏ, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து 4நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடும் வெயிலிலும் தனது தீவிர பிரச்சாரத்தின் மூலம் அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்த முடித்து கொண்டு திருச்சி வந்தடைந்த சரத்குமாருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து திருச்சி சங்கம் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுடன் அறிமுகம் செய்விக்கப்பட்டது.

சேலத்தில் வருகிற ஜூலை 15ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் கட்சி நிர்வாகிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தலைவர் சரத்குமார் பேசும் போது கடந்த இடைத்தேர்தலைவிட அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றும் இதற்காக சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோனை கூட்டத்தில் எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் வக்கீல் பன்னீர் செல்வம், மாநகர் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், புறநகர் மாவட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

New facebook fan page banner updated



Tuesday, 5 June 2012

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,நடிகரும் தென்காசி தொகுதி எம்.எல்.ஏவும் ஆன சரத்குமார் புதுக்கோட்டையில் பிரச்சாரம்

AISMK
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,நடிகரும் தென்காசி தொகுதி எம்.எல்.ஏவும் ஆன சரத்குமார் கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன்விடுதியில் பிரச்சாரம் தொடங்கி கோட்டைக்காடு, புதுப்பட்டி, சூறக்காடு, பெரியன் விடுதி, வானக்கண்காடு ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதிரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம்.எல்.ஏக்கள் வாளாஜா, ராஜேந்திரன், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அதிமுக ஒன்றிய வட்ட, கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைவர் சரத்குமார் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நல்லிணக்கத்துடன் பணியாற்றி வருகிறது.

புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம். எதிர்கட்சி தலைவர் சட்டசபைக்கு வந்து மக்கள் பிரச்சனைகளை முறையாக பேசி செயல்படவேண்டும். எதிரிகட்சியாக செயல் படக்கூடாது. இத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று சொல்லும் கட்சிகள் அதற்கான காரணத்தை சொல்லவில்லை.

பிறந்தநாள் விழாவை கொண்டாடுகின்றனர். மக்கள் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தான் பேசவேண்டும். தமிழக முதல்வர் மக்கள் நலனில் சிந்தனை உள்ளவர். ஆகையால் அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்
Related Posts Plugin for WordPress, Blogger...