Friday, 17 June 2011

கல்வி முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும்:- சரத்குமார்


தென்காசி:  
கல்வி முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது என்று தென்காசியில் சரத்குமார் எம்எல்ஏ பேசினார். 

தென்காசியில் அரசு பொது நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளில் 10 வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. 

இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி பேசியதாவது, 

அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகம் பெரிதும் உதவுகின்றது. மாணவ, மாணவிகள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்.

தாய்மொழியை நேசிப்பவனால்தான் தாய்நாட்டை நேசிக்க முடியும். தென்காசி தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன். 50 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனையாக இருக்கிறது. 

கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். எவ்வளவு சிக்கரம் முடியுமோ அவ்வளவு சிக்கரம் அது நடந்தே ஆக வேண்டும். கல்வி வியாபாரம் ஆவது வளரும் நாட்டுக்கு நல்லதல்ல. சிறந்த மாணவ, மாணவியர்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்றார்.


Related Posts Plugin for WordPress, Blogger...